அதிமுக பொதுக்கூட்டம்

திருத்துறைப்பூண்டி, செப்.18: திருத்துறைப்பூண்டி நகர அதிமுக சார்பில் அண்ணா 110வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தெற்கு வீதியில் நடைபெற்றது. நகர செயலாளர் சண்முகசுந்தர் தலைமை வகித்தார். அரசு வழக்கறிஞர் பத்மநாபன், நகர இணை செயலாளர் சீதா, முன்னாள் கவுன்சிலர் முருகானந்தம், கலைமணி முன்னிலை வகித்தனர்.. கூட்டத்தில் பேச்சாளர் அரிகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் பாலதண்டாயுதம், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு, வக்கீல்கள் உள்ளிட்டோர் பேசினர்.   முன்னதாக வார்டு செயலாளர் ஜோதிமணி வரவேற்றார் முடிவில் வார்டு செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Related Stories: