பாபநாசம், செப். 18: பாபநாசத்தில் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் பாப்பம்மாள் தலைமை வகித்து பேசுகையில், மாணவர்களுக்கு அடிப்படை கணக்குகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் தெரிந்திருக்க வேண்டும். தாய் மொழியான தமிழ் வாசிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும். 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் வாசிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும் என்றார். பாபநாசம் வட்டார கல்வி அலுவலர்கள் பேபி, செல்வகுமாரி, ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.