மகாலிங்க சுவாமி கோயிலில் உள்ள ஐம்பொன் சிலைகளின் உண்மை தன்மையை அறிய வேண்டும்

கும்பகோணம், செப். 18: திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் உள்ள பழங்கால ஐம்பொன் சிலைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென சிவசேனா கட்சி வலியுறுத்தியது.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சிவசேனா கட்சியின் மாநில நிர்வாகக்குழு நடந்தது. மாநில தலைவர் சாய்சரவணன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட பொது செயலாளர் சுரேஷ், நகர தலைவர் ரவி முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் குட்கா வழக்கில் சிபிஐ வழக்குப்பதிந்து குற்றவாளிகள் பட்டியலில் உள்ள டிஜிபி ராஜேந்திரனை பதவிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். சூரக்கோட்டை ராஜா மீது கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்கு போட்டதை வாபஸ் பெற வேண்டும். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் உள்ள பழங்கால ஐம்பொன் சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: