கும்பாபிஷேகம்

திருவிடைமருதூர், செப். 18:  திருமலைராஜபுரத்தில் உள்ள 5 கோயில்களின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருவிடைமருதூர் தாலுகா திருமலைராஜபுரத்தில் வரசித்தி விநாயகர், சித்தி விநாயகர், அய்யனார், பிடாரி அம்மன், மகா மாரியம்மன் ஆகிய 5 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பக்தர்கள் நன்கொடையால் திருப்பணி நடந்தது. இதையடுத்து 5 கோயில்களுக்கும் கும்பாபிஷேக விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. இதைதொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்து வந்தது. நேற்று காலை 5 கோயில்களின் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பட்டுக்கோட்டை:  பட்டுக்கோட்டையில் மதுக்கூர் ரோடு வளவன்புரம் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்  நடந்தது. இதையொட்டி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம் நடந்தது. பின்னர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

Related Stories: