கேசராபட்டியில் கபடி போட்டி

பொன்னமராவதி, செப்.18: பொன்னமராவதி அருகே கேசராபட்டி, எம்.புதூர் ஆகிய இடங்களில் கபடிப் போட்டி நடந்தது. கேசராபட்டியில் நடைபெற்ற போட்டியில்  முதல் பரிசை கேசராபட்டி எஸ்கேபி அணியும், இரண்டாம் பரிசை கட்டுக்குடிப்பட்டி எஸ்விஆர் அணியினரும், மூன்றாம் பரிசை கேசராபட்டி சேது பிரன்ஸ்ட் பாய்ஸ் அணியனரும் 4வது பரிசை மைலாப்பூர் கண்ணன் பிரதர்ஸ் அணியினரும் பெற்றனர். வெற்றிபெற்ற அணியினருக்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவர் செல்வராஜ், ரெங்கசாமி மற்றும் பலர் பரிசு வழங்கினர். 19 அணி வீரர்கள் பங்பெற்று விளையாடியுள்ளனர். இதேபோல எம்.புதூரில் நடைபெற்ற போட்டியில் 28அணிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசை குறிச்சிப்பட்டி அணியினரும், இரண்டாம் பரிசை பெருமநாடு அணியினரும், 3வது பரிசை கரையாம்பட்டி அணியினரும் பெற்றனர்.

Related Stories: