ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கை விளக்க கூட்டம்

கரூர், செப்.18: ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. ரயில்வே தொழிலாளர்களுக்கு உறுதி செய்யப்பட்ட பென்சன், தனியார் மயத்தை ரத்து செய்யவேண்டும். பதவிஉயர்வு தடைகளை களையவேண்டும், உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வாரிசுக்குவேலை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கோரிக்கை விளக்க கூட்டம் நேற்று ரயில்நிலையம் அருகே நடைபெற்றது. கிளை செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். கிளை தலைவர் முத்தையா முன்னிலை வகித்தார். சங்க மண்டல தலைவர் ராஜாஸ்ரீதர், சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன், தலைவர் பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ராஜசேகர் நன்றி கூறினார்.

Related Stories: