சீர்காழியில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, பணம் கொள்ளை

சீர்காழி,செப்.18: சீர்காழியில் வீட்டின் பூட்டை உடைத்து 15  பவுன் நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். சீர்காழி  விளந்திடசமுத்திரம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் முகமது அலி(39). வெளிநாட்டில்  வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ஊர் திரும்பிய அவர் கடந்த 15ம் தேதி  மாலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தைக்கதாலில்  உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவரது வீடு  திறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் இதுபற்றி  முகமது  அலிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த முகமது அலி  வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, 2 அறைகளில்  வைக்கப்பட்டிருந்த பீரோக்களை உடைத்து 15 பவுன் நகைகள், ரூ.26ஆயிரம்  ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து  முகமது அலி அளித்த புகாரின் பேரில்  சீர்காழி போலீசார் சம்பவ இடத்தை  பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை  தேடி வருகின்றனர். இப்பகுதியில்  தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: