திராமங்கலத்தில் சுகாதார சபை கூட்டம்

சீர்காழி,செப்.18: சீர்காழி அருகே கதிராமங்கலம் ஊராட்சியில் சுகாதார சபை கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ரெஜனாராணி தலைமை வகித்தார். முழு சுகாதார இயக்க ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கழிவறை கட்டுதல், பராமரித்தல், பயன்படுத்துதல், திறந்த வெளியில் மலம் கழித்தல், அதனால் ஏற்படும் தீமைகள், கழிவறை பயன்படுத்துதலை ஊக்கப்படுத்துதல், கழிவறை இல்லாத பயனாளிகளை கழிவறை கட்ட ஊக்கப்படுத்துதல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தப்பட்டது. இதில் ஊராட்சி எழுத்தர்கள், வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் தங்க அன்பரசன் நன்றி கூறினார்.

Related Stories: