நாகை,செப்.18: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை சட்ட மன்ற தொகுதி சார்பில் மத்திய மாநில அரசுகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
தமிழக அரசு துரை ரவிக்குமாருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை வெளிப்பாளையம் அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். நாகை நகர செயலாளர் மணி வரவேற்றார். தொகுதி துணை செயலாளர் சுரேஷ, திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளாகள் நாகை வடக்கு அடவடிவேல், திருமருகல் வடக்கு சக்திவேல், தெற்கு காசிநாதன், திட்டசேரி பேரூர் செயலாளர் செலவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, தஞ்சை மண்டல செயலாளர் விவேகானந்தன், தேர்தல் பணிக்குழு செல்வஅரசு, நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நாகை நகர செயலாளர் தமிழ்முகம் நன்றி கூறினார்.