கடலில் கரைப்பு வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார பயணம்

வேதாரண்யம்,செப்.18: வேதாரண்யத்தில் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் சார்பில் ராஜாஜி பூங்காவில் இருந்து இந்திய நாட்டை பாதுகாப்போம். இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்போம் என்கிற பிரசார பயணத்தை இந்திய கம்னியூஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பிரசார பயணம் தமிழகத்தில் ஆறு இடங்களில் நேற்று தொடங்கி வருகிற 23ம் தேதி திருப்பூரைஅடைகிறது. வழி நெடுகிலும் பிரசார பயணத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. பிரசார பயணத்தை துவக்கி வைப்பதற்கு முன் வேதாரண்யம் உப்பு சத்தியகிரக நினைவு ஸ்தூபிக்கு சென்று முத்தரசன் மற்றும் கட்சி பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின் வேதாரண்யத்தில் உள்ள பெரியார், அம்பேத்கர், விவேகானந்தர், திருவள்ளுவர், சுதந்திர போராட்ட தியாகிகள் சர்தார் வேதரெத்தினம், வைரப்பன் ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதை தொடர்ந்து வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் பிரசார விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சீனிவாசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் வரவேற்றார்.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் பழனிச்சாமி, உலகநாதன், சிவபுண்ணியம், முன்னாள் எம்பி செல்வராசு, காங்கிரஸ் முன்னாள் எம்பி பி.வி.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: