நாகை,செப்.18: நாகை மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் கடந்த 15 மற்றும் 16ம் தேதி மாவட்டம் முழுவதும் மது விலக்கு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் அனுமதியின்றி மது விற்றதாக 75 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 7872 லிட்டர் புதுச்சேரி சாராயம், 180 மி.லி. அளவு கெண்ட 20 மது பாட்டில்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் பரிமுதல் செய்யப்பட்டது.