சீர்காழியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

சீர்காழி,செப்.18: சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சீர்காழி எம்.எல்.ஏ பாரதி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம், நற்குணன், முன்னாள் எம்எல்ஏக்கள் ரெங்கநாதன், மூர்த்தி, சக்தி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பக்கிரிசாமி வரவேற்றார். அதிமுக அமைப்பு செயலாளர் முருகுமாறன், தலைமை கழக பேச்சாளார்கள் சிவசண்முகம், சுப்பையா, எம்எல்ஏ. பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட முன்னாள் ஊராட்சிகுழு தலைவர் சந்திரசேகரன், மாவட்ட மீனவரணி செயலாளர் நாகரத்தினம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் போகர்ரவி, மாமல்லன், அஞ்சம்மாள்மணி,  மாவட்ட பிரதிநிதி செல்கார்த்திக், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பரணிதரன், நிர்வாகிகள் பேராசிரியர் ஜெயராமன், பாண்டியன், மலையப்பன், பாலாஜி, மணி, சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: