டூவீலர்கள் மோதலில் எலக்ட்ரீஷியன் பலி: 2 பேர் காயம்

காரைக்கால்,செப்.18: நாகை மாவட்டம் வடக்கு பால் பண்ணனச்சேரி சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் எலக்ட்ரீஷியன் தண்டபாணி (44). இவர் நேற்று மாலை 6 மணி சுமாருக்கு பைக்கில் காரைக்கால் கிழவாஞ்சூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது காரைக்காலிலிருந்து  பெருகடமன்னூர் எடதெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பழனிவேந்தன் (23), நாகை அக்கரைக்குளத்தை சேர்ந்த ஆனந்தன் மகன் வசந்தகுமார் (21) ஆகிய இருவரும் மற்றொரு பைக்கில் வந்த போது ஏதிர்பாராமல் சாலை ஓரம் அருகில் இருந்த பேரிகாட் மீது மோதி எதிரே வந்த தண்டபாணி பைக் மீது மோதினர். இதில் 3 பேரும் காயம் அடைந்தனர். இதை அறிந்த திருப்பட்டினம் போக்குவரத்து காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயப்பட்டவர்களை நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தண்டபாணி உடலை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். காயமடைந்த பழனிவேந்தன், மற்றும் வசந்தகுமார் சிகிச்சை பெற்று வருகின்றனர், இது குறித்து இரு மாவட்ட போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: