கரூர் 39வது வார்டில் வடிகால் வசதி கேட்டு மக்கள் சாலை மறியல்

கரூர், செப்.18: கரூர் 39வது வார்டில் வடிகால் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரூர் நகராட்சிக்குட்பட்ட 39வது வார்டு தாந்தோணி தில்லைநகர் பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 1 வருடத்திற்கு முன் சாலை மற்றும் வடிகால் வசதி கட்டும் பணி துவங்கி இன்னும் முழுமை பெறவில்லை.  இதனால் வடிகாலில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும், கொசு தொல்லையால் நோய் மற்றும் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும், மழைகாலங்களில் சாக்கடை கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்துவிடுவதாகவும் கூறி கடந்த ஜூலை மாதம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இப்பகுதி மக்கள் மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று (17ம்தேதி) காலை 8 மணியளவில் மாயனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பசுபதிபாளையம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாாிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக வடிகால் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் போில் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதித்தது.

Related Stories: