திருமண வரவேற்பு விழா

ராமநாதபுரம், செப்.18:  ராமநாதபுரம் வாசுதேவன் பாத்திரக்கடை உரிமையாளர் ஜோதிமணி-சௌந்திரவள்ளி தம்பதியரின் மகன் கதிரவனுக்கும், காரைக்குடி சுப்பிரமணியன்-முத்துலெட்சுமி தம்பதியரின் மகள் ராஜலட்சுமிக்கும் கடந்த 12ம் தேதி காரைக்குடியில் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் வரவேற்பு விழா நடந்தது. விழாவில் திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

இதில் முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் சம்பத், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன்  உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், அஜித்குமார், அனிதா, ஆரா, இளன், சோமலிங்கம் உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள், வாசுதேவன் பாத்திரக்கடை ஊழியர்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும்பொதுமக்கள்  கலந்து கொண்டனர். விழாவிற்கான  ஏற்பாடுகளை வாசுதேவன் பாத்திரக்கடை உரிமையாளர் ஜோதிமணி குடும்பத்தார் செய்திருந்தனர்.

Related Stories: