டிராக்டர் மோதி சிறுமி பலி

தொண்டி, செப்.18:  டிராக்டர் மோதியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்தவர் சம்சுல். இவரது மகள் சுலைலா பானு(7) நேற்று காலை வீதியில் விளையாடிக் கொண்டிருந்த போது பின்நோக்கி வந்த டிராக்டர் சிறுமியின் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்ப இடத்திலேயே பலியானார். டிரைவர் இம்ரான் கானை எஸ்.பி.பட்டினம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள வெள்ளையபுரத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த வீரமுத்து(20), கஞ்சகோன்வயலை சேர்ந்த மாரி (35) இருவரும் டூவீலரில் நேருக்கு நேர் மோதியனர். படுகாயமடைந்த இருவரும் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: