வைகையில் மூழ்கிய மாணவன் உடல் மீட்பு

மதுரை, செப்.18:  வைகை ஆற்றில் மூழ்கி இறந்த மாணவனின் உடல் மீட்கப்பட்டது. 2 நாட்களுக்குபின் கரை ஒதுங்கியது. மதுரை செல்லூர் கீழவைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் மகன் பாண்டியராஜன்(17). இவர் பனகல் ரோட்டில் உள்ள மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் அருள்தாஸ்புரம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் இவரது உடலை தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை சிம்மக்கல் கல்பாலம் அருகே இவரது உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்து வந்த செல்லூர் போலீசார், பாண்டியராஜனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 4 நாட்களில் 6 பேர் வைகையாற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.வைகையில் வெள்ளம் குறையும் வரை யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: