பெரியார் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை

மதுரை, செப்.18:  தந்தை பெரியார் 140வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. மதுரை அழகர்கோவில் சாலையிலுள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தளபதி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், பொறுப்பு குழு உறுப்பினர்கள் வேலுசாமி, குழந்தைவேலு, மருத்துவரணி மாநில துணைத் தலைவர் டாக்டர் சரவணன், மகளிரணி மாநில துணைச் செயலாளர் தமிழரசி, ஜெயராம், ஜவகர், தெட்சிணாமூர்த்தி, திராவிடமாரி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.அ.தி.மு.க சார்பில் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் துரைப்பாண்டி தலைமையில் எம்.பி. கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் தங்கம், ராஜா, எம்.எஸ்.பாண்டியன், சண்முகவள்ளி உள்பட பலர் மாலை அணிவித்தனர்.திராவிடர் கழகம் சார்பில் மண்டல செயலாளர் எடிசன்ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பூமிநாதன் தலைமையில் அவைத்தலைவர் சின்னசெல்லம், சுப்பையா, சுருதிரமேஷ், ம.தொ.மு. இணை பொதுச்செயலாளர் மகபூப்ஜான் உளபட பலர் மரியாதை செலுத்தினர்.அ.ம.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயபால், ராஜலிங்கம் உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் நகர் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையிலும், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கவியரசு தலைமையிலும், ஜனதாதளம் மாநில பொதுச்செயலாளர் ஜான்மோசஸ், நகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது.திருமங்கலம் மதுரை ரோட்டில் உள்ள பெரியார்சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன் தலைமையில் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் மாலை அணிவித்தார். தொழிற்சங்க தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் ராமசாமி, முத்துகருப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: