செங்கல்பட்டில் முப்பெரும் விழா

செங்கல்பட்டு, செப்.18: செங்கல்பட்டு உரிம அளவர்கள் மற்றும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் திருமணடபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சங்கத்தின் சாசன தலைவர் சுகாநந்தம் தலைமை வகித்தர். சங்கத்தலைவர் ஜவகர் முன்னிலை வைத்தார். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு ஆர்டிஒ முத்துவடிவேல், செங்கல்பட்டு தாசில்தார் பாக்கியலெட்சுமி, செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி, நகர் நல அலுவலர் சித்திரசேனா, ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தலைக்கவசம் அணிவது பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில் சங்க பொருளாளர் ரமேஷ் பாபு நன்றி கூறினார்

Related Stories: