கூடுவாஞ்சேரி அருகே கல்லூரி மாணவி மாயம்

கூடுவாஞ்சேரி,சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் கிராமம் யாதவர் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (47). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்துகிறார். இவரது மனைவி பச்சையம்மாள் (43). இவர்களது 2வது மகள் ராதிகா (19). இவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சைன்ஸ் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.கடந்த மாதம் 24ம் தேதி கல்லூரிக்கு சென்ற ராதிகா வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடத்தில் விசாரித்தும் ராதிகாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காயார் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் புகார் பதிவு செய்யாமலும் விசாரணை நடத்தாமலும் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானியிடம் ஈஸ்வரன் புகார் செய்தார். இதன்படி உடனடியாக விசாரிக்கும்படி காயார் போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Related Stories: