அதிமுக அரசை கண்டித்து திமுகவினர் தாம்பரத்தில் இன்று ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், செப்.18: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் குட்கா ஊழல், உள்ளாட்சி, நெடுஞ்சாலை, பல துறை ஊழல், மக்கள் விரோத எடப்பாடி பினாமி அதிமுக அரசைக் கண்டித்து இன்று (18ம் தேதி)  காலை 10 மணியளவில் தாம்பரம் சண்முகம் சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என் (தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ) தலைமையில் நடைபெற உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் த.துரைசாமி, மாவட்ட துணைச்செயலாளர்கள் வெ.விசுவநாதன், ஜி.சி.அன்புச்செழியன், கலைவாணி காமராஜ் மற்றும் மாவட்ட பொருளாளர் எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா வரவேற்கிறார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்ற உள்ளனர். எனவே, இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், பிரதிநிதிகள், துணை அமைப்புகளான இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வழக்கறிஞரணி, தொண்டரணி, மகளிர் தொண்டரணி, தொழிலாளரணி, பொறியாளரணி, இலக்கிய அணி, கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அணி, நெசவாளர் அணி, ஆதிதிராவிடர் நல உரிமை குழு அணி, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, விவசாய அணி, மருத்துவர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, திமுக முன்னோடிகள், நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories: