சங்கரன்கோவில், செப். 18: சங்கரன்கோவில் அருகே குழந்தைகள் விளையாட்டில் ஏற்பட்ட பிரச்னையை கண்டித்ததால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில் அருகே கோ.மருதப்பபுரத்தை சேர்ந்த சேகர் மனைவி செல்வி(40). சம்பவத்தன்று அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளை செல்வி கண்டித்ததால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன்கள் ரமேஷ் (45), பொன்ராஜ் (33) மற்றும் ரமேஷின் மகன்கள் மதன் (23), ரஞ்சித் (19) ஆகிய 4 பேரும் செல்வியை தாக்கினர்.