அம்பை, செப். 18: மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் மணிமுத்தாறு அருவி சுற்றுலா பயணிகளின் மனதை மிகவும் கவர்ந்த அருவியாகும். ஒகி புயலால் எற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது சுற்றுலா பயணிகள் குளிக்கும் பகுதியிலுள்ள தரை மற்றும் தடுப்பு கம்பிகள் கடும் சேதம் அடைந்தது. இதனால் சேதம் அடைந்த அருவியின் பெரும் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்லாதிருக்க தடுப்பு சுவர் கட்டப்பட்டது. இதனால் ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் குளித்து வருகின்றனர்.