பாலிடெக்னிக் ஊழியர்கள் போராட்டம்

காரைக்கால், செப். 14:   புதுச்சேரி அரசின்  பிப்மேட் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள், அமைச்சக ஊழியர்கள் ஆகியோருக்கு கடந்த ஆகஸ்ட் மாத சம்பளம் இன்றுவரை வழங்கப்படவில்லை. அதுபோல்  பகுதிநேர ஊழியர்களுக்கும் கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.இதுதொடர்பாக புதுச்சேரி அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும்  விதமாகவும், சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் கடந்த 13ம் தேதி முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நேற்று 3ம் நாளாக போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Related Stories: