வாலிபரை தாக்கிய 3 பேர் கைது

திருவெண்ணெய்நல்லூர், செப். 18:  பண்ருட்டி அருகே கொரத்தி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் மகன் அரவிந்தன்(18). இவரது நண்பர்கள் குணசீலன் மகன் ரகு(22), சிவபெருமாள் மகன் கார்த்திக்(23) ஆகியோருடன் கீழ்தணியாலம்பட்டு கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதில் அரவிந்தனுக்கும், அதே ஊரை சேர்ந்த காமராஜ் மகன் கார்த்திக் என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.  இந்நிலையில் நேற்று முன்தினம் அரவிந்தன், ரகு, சிவபெருமாள் மகன் கார்த்திக், அரவிந்தன் நண்பர் கீழ்தணியாலம்பட்டு கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மகன் சந்துரு(18) ஆகியோர் சேர்ந்து காமராஜ் மகன் கார்த்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த கார்த்தி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி திருவெண்ணெய்நல்லூர் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிந்து அரவிந்தன், ரகு, கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.   

Related Stories: