முன்விரோத தகராறு 16 பேர் மீது வழக்கு

முஷ்ணம், செப். 18: முஷ்ணம் வக்காரமாரியில் மாரியம்மன் கோயில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோயில் கட்டுவது தொடர்பாக ஏற்கனவே இரு தரப்பினருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி வக்காரமாரியை சேர்ந்த தமிழ்வாணன், அம்மாசி, கஜேந்திரன், தமிழரசன், பாண்டியன், பார்த்திபன், இளையராஜா, பேரூர் கிராமத்தை சேர்ந்த மாதேஷ் ஆகியோர் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த அறிவழகனை(31) திட்டி தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து முஷ்ணம் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, சேகர் ஆகியோர் 8 பேர் மீது வழக்கு பதிந்து தமிழ்வாணன்(54), அம்மாசி(55), கஜேந்திரன்(35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது போன்று மணிமாறன்(19) என்பவர் அளித்த புகாரின் பேரில் 8பேர் மீது வழக்கு பதிவு செய்து வேலாயுதம்(50), அறிவழகன்(31), சரவணன்(25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: