கலைஞர் மறைவு செய்தி கேட்டு இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி

பண்ருட்டி, செப். 18:   திமுக தலைவர் கருணாநிதி மறைந்த செய்தியை அறிந்து உயிரிழந்த கட்சி தொண்டர்களுக்கு தலைமை கழகம் மூலம் தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக பண்ருட்டி அருகே திருவாமூரை சேர்ந்த தண்டபாணி, வீரப்பெருமாநல்லூரை சேர்ந்த ஏழுமலை ஆகியோர் கலைஞர் இறந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியில் இறந்தனர். இந்த இரு குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலைகளை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கணேசன் எம்எல்ஏ, நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் ஆகியோர் வழங்கி ஆறுதல் கூறினர். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அரிராமச்சந்திரன், பலராமன், விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி, வடக்கு ஒன்றிய ராதா

கிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: