விருத்தாசலம், செப். 18: உச்சநீதிமன்றம் கொண்டு வரும் புதிய சட்டத்தை எதிர்த்து விருத்தாசலத்தில் ஒருநாள் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வழக்கறிஞர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் அம்பேத்கர், வழக்கறிஞர் அருள்குமார், புஷ்பதேவன், சீனுவாசன், மணிகண்டராஜன், காசி விசுவநாதன், தரணி, ஜெயபிரகாஷ், கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் அசோக்குமார், கருணாநிதி, குபேரமணி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.