கடலூர், செப். 18: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
தீபாவளி பண்டிகையின் போது கடலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் அரசு விதிகளை கடைபிடித்து வரும் 28ம் தேதிக்குள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் வெடிமருந்து சட்டம் 1884 மற்றும் வெடிமருந்து விதிகள் 2008ல் உள்ள விதி 84யை முறையாக கடைபிடித்து பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து ஆட்சேபனை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முந்தைய காலங்களில் தற்போது தேர்ந்தெடுத்துள்ள இடத்தில் கடை வைக்க உரிமம் பெற்றவர்கள் தற்போது விண்ணப்பத்துடன் அப்போது பெற்ற உரிம நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.