சீரமைக்கப்படாத சாலை பள்ளி மாணவர்கள் அவதி

பண்ருட்டி, செப். 18: பண்ருட்டி அருகே பூண்டி ஊராட்சிக்குட்பட்ட கட்டமுத்துப்பாளையம் பகுதியில் திருத்துறையூர் ரயில்வே நிலையம் உள்ளது. இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் வசதிக்காக போடப்பட்ட சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது. சுமார் 1.,5 கி.மீ உள்ள இந்த சாலையில் ஏராளமான மரங்களும் செடிகளும் வளர்ந்து காணப்படுகிறது.கடந்த ஜனவரி மாதம் இந்த சாலையை போடுவதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பழைய கற்களை பெயர்த்து எடுத்தனர். ஆனால் இதுநாள்வரை புதிய சாலையை போடாமல்  உள்ளதால் மாணவ, மாணவிகள், விவசாயிகள், ரயில் பயணிகள் இச்சாலை வழியாக செல்ல முடியாமல் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.எனவே இச்சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: