சென்னை: கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் அரசு அம்பேத்கர் சட்டக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரி கேளம்பாக்கம் - வண்டலூர் பிரதான சாலையில் இருந்து 3 கி.மீ. தூரம் உள்ளே அமைக்கப்பட்டு உள்ளது. போதிய போக்குவரத்து வசதி இல்லை என்று கூறி சட்ட கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது பிரச்னை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று 3 மணிக்கு வகுப்புகள் முடிந்ததும் மாணவர்கள் கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையில் புதுப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர். சட்டக்கல்லூரி மாணவர்கள் கும்பலாக இருந்ததை பார்த்த மாநகரப் பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டார்.