எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

புழல்,: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது, நீதிமன்றம் மற்றும் காவல் துறையினரை பற்றி அவதூறாக பேசிய பாஜ  தேசிய பொது செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, புழல் அம்பேத்கர் இளைஞர் படை சங்க நிர்வாகி திருப்பதி தலைமையில் நேற்று முன்தினம் இரவு அம்பேத்கர் சிலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமானோவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, நீதிமன்றத்தையும் காவல்துறையினரையும் அவதூறாக பேசிய எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில், எச்.ராஜாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, உருவபொம்மையை அகற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: