சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறப்பு

உடுமலை, செப். 12: உடுமலையில் அமராவதி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நேற்று கஞ்சி தொட்டி திறந்தனர்.உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் சம்பள நிலுவை தொகை வழங்க கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.லாரிகள் சிறைபிடிப்பு, கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். ஆலை வளாகத்தில் உண்ணாவிரதம், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், நேற்று தொழிலாளர்கள் ஆலை வளாகத்தில் கஞ்சி தொட்டி திறந்தனர்.

அனைவருக்கும் கஞ்சி வழங்கப்பட்டது. தொடர் போராட்டம் நடத்தியும் ஆலை நிர்வாகத்தினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர். உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: