உடுமலை, செப். 12: உடுமலையில் அமராவதி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நேற்று கஞ்சி தொட்டி திறந்தனர்.உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் சம்பள நிலுவை தொகை வழங்க கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.லாரிகள் சிறைபிடிப்பு, கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். ஆலை வளாகத்தில் உண்ணாவிரதம், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், நேற்று தொழிலாளர்கள் ஆலை வளாகத்தில் கஞ்சி தொட்டி திறந்தனர்.