பெரம்பலூர், செப். 12: மின்வாரியத்தால் நிர்ணயித்த 2 நாட்களில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்களை மாற்றித்தர வேண்டுமென பெரம்பலூரில் நடந்த மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் மனு அளித்தது. பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாவட்ட மின்வாரிய குறைதீர் கூட்டம் நடந்தது. கோட்ட செயற்பொறியாளர் பிரகாசம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மின்சாரவாரிய பெரம்பலூர் (வடக்கு) மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்களை உடனுக்குடன் சரி செய்து மாற்றியமைக்க திருச்சி மன்னார்புரம் மெட்ரோ அலுவலகத்தில் குழு செயல்பட்டு வருவதுபோல் பெரம்பலூரிலும் அமைக்க வேண்டும். மின்வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட கெடுநாளான 2 நாட்களில் பழுடைந்த டிரான்ஸ்பார்மர்களை மாற்ற வேண்டும். மின் கட்டணத்துடன் அபராதம் விதித்து வரும் முறையையும், மின்கட்டணத்துடன் இவரியாக 5 சதவீதமும், ஜிஎஸ்டி வரியாக 5 சதவீதமும் என கணக்கிட்டு வசூல் செய்து வரும் முறையை கைவிட வேண்டும்.