கீழப்பழுவூரில் உழவர் பாதுகாப்பு திட்ட முகாம்

அரியலூர், செப். 12: அரியலூர் அருகே உள்ள கீழப்பழுவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வருவாய்த்துறை சார்பில் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் திருப்பதி முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் சவுந்தர்ராஜன் வரவேற்றார். முகாமில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் திருமண உதவித்தொகை, இயற்கை மரண நிவாரணம் பெறுதல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 112 மனுக்கள் பெறப்பட்டன. இதையடுத்து மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான உத்தரவுகளை அரியலூர் தாசில்தார் முத்துலட்சுமி வழங்கினா

Related Stories: