குடியாத்தம், செப். 12:குடியாத்தம் அருகே மோர்தானா அணையில் மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்ைச அளிக்கப்படுகிறது.வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மோர்தானா கிராமத்தை சேர்ந்தவர்கள் குப்புசாமி(50), கோவிந்தசாமி(50), கஜேந்திரன்(55). இவர்கள் 3 பேரும் நேற்று காலை மோர்தானா அணையில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.அப்போது தண்ணீர் குடிக்க வந்த ஆண் யானை ஒன்று 3 மீனவர்களையும் தும்பிக்கையால் தூக்கி வீசி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அங்கிருந்த விவசாயிகள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.