சேலம் மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தடை

சேலம், செப்.11:சேலம் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என சிஇஓ கணேஷ் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிக்குலேசன் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள், பள்ளி வேலை நேரத்திற்கு முன், பின் சிறப்பு வகுப்புகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பள்ளியின் வேலை நேரத்திற்கு மிகாமல் பாட வகுப்புகளை திட்டமிடல் வேண்டும். மேலும், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர்களின் எழுத்துப்பூர்வமான விருப்பத்துடன் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு எடுக்க ேவண்டும் என சிஇஓ கணேஷ் மூர்த்தி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: