ஆட்டோக்கள் மோதல்; பெண் பலி

வாழப்பாடி, செப்.11: வாழப்பாடி அருகே, ஆட்டோக்கள் மோதியதில் பெண் பலியானார். மேலும் 3 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வாழப்பாடி அருகே பழனியாபுரத்தில், நேற்று மங்கபுரம் நெடுஞ்சாலையில் மினி ஆட்ேடா வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த ேஷர் ஆட்டோ நேருக்கு நேராக மோதியது. இதில் ஷேர் ஆட்ேடாவில் வந்த பூலாவரியை சேர்ந்த ஈஸ்வரி(45) என்பவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் கார்த்தி (27), லட்சுமி, மற்றொரு பெண் என 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து வாழப்பாடி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரித்து வருகிறார்.

Related Stories: