திருப்பூர், செப். 11: திருப்பூரில் புகையிலை பொருட்களை விற்ற காய்கறி கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் தாராபுரம் ரோடு கோவில் வழியில் உள்ள ஒரு காய்கறி கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக திருப்பூர் ரூரல் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் எஸ்ஐ., செல்லதுரை தலைமையிலான போலீசார், கடைக்கு சென்று சோதனை நடத்தினர். இதில், புகையிலை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடை உரிமையாளரான பல்லடம், உகாயனூரை சேர்ந்த பன்னாரி (46) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.