கோவை, செப்.11: கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, 285 ஊராட்சி பகுதியில் சிறுவாணி, பில்லூர் 1 மற்றும் 2, பவானி, ஆழியாறு குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது.
கோவை நகரம், புறநகர் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. கேரளா மாநிலத்தை தொடர்ந்து எலி காய்ச்சல் கோவையிலும் பரவி வருகிறது. 20க்கும் மேற்பட்டவர்கள் எலி காய்ச்சல் பாதிப்பில் இருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில், குடிநீர் தொட்டிகளில் எலி, அணில் போன்றவற்றின் சிறுநீர் கலந்திருந்தால் எலி காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.