தொழில் நல்லுறவு பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை, செப்.11: வேலையளிப்பவர்கள், தொழிற்சங்கங்கள் தொழில் நல்லுறவு பரிசுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கோவை தொழிலாளர் துறை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும் நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நல்ல தொழில் உறவினை பேணி பாதுகாக்கும் வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017ம் ஆண்டிற்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும்.

இவ்விருதுக்குரிய விண்ணப்பங்களை தொழிலாளர் துறையின் வலை தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து  விண்ணப்பிக்கலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்திலுள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிருந்தும் பெற்று கொள்ளலாம். ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும் விண்ணப்ப கட்டணம் செலுத்திய விபரத்தினையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு வரும் அக்டோபர் 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கோவை தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: