தேனூரில் தடுப்பணையை அகற்றக்கோரி மக்கள் சாலை மறியல்

பாடாலூர், செப்.11:  ஆலத்தூர் தாலுகா தேனூரில் ஏரிவரத்து வாய்க்காலில் உள்ள தடுப்பணையை அகற்றக்கோரி பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஆலத்தூர் தாலுகா டிகளத்தூரில் உள்ள ஏரி நிரம்பி அந்த நீர் தேனூர் ஏரிக்கு செல்லும் வகையில் வாய்க்கால் உள்ளது அந்த வாய்க்காலில் தண்ணீர் தேங்கி நின்று செல்லும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால் தேனூர் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. அதனால் அந்த தடுப்பணையை அகற்ற வேண்டும் எனக்கோரி தேனூர் பொதுமக்கள் 25க்கும் மேற்பட்டோர் டி.களத்தூர் - எதுமலை சாலையில்  சாலை மறியலில் ஈடுபட்டனர் .தகவலறிந்த பாடாலூர் இன்ஸ்பெக்டர் ராஜ் குமார், வருவாய் ஆய்வாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு  சென்று சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் டி.களத்தூர் - எதுமலை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: