ஜெயங்கொண்டம் அருகே கதண்டு கடித்த இருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி

தா.பழூர், செப்.11: ஜெயங்கொண்டம் அருகே கதண்டு கடித்த இருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமர் மகன் பொன்னுசாமி (55), செல்லக்கண்ணு மகன் கோவிந்தராஜன்(45). இருவரும் வயல்காட்டில் கூலி வேலைக்கு சென்று வரப்பு சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலியில் இருந்த கதண்டுகள் இருவரையும் துரத்தி துரத்தி கடித்தது. இதில் காயமடைந்த இருவரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: