பெரம்பலூர் மாவட்டத்தில் காலாண்டு தேர்வு துவக்கம்

பெரம்பலூர்,செப்.11:  பெரம்பலூர் மாவட்டத்தில் காலாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கின. கல்விஅலுவலர்கள் ஆய்வு. செய்தனர்.    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக தமிழகஅளவில் நேற்று முதல் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ளன.

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 6முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கும், எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம்வகுப்பிற்கும், 11,12வகுப்புகளுக்கும் நேற்று(10ம்தேதி)தொடங்கி வரும்  22ம்தேதிவரை காலாண்டுத் தேர்வுகள் காலையிலும் மாலையிலும் நடத்தப்படுகிறது.இந்தத் தேர்வு மையங்களை பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் (பொ) புகழேந்தி, பெரம்பலூர் மாவட்டக்கல்வி அலுவலர்(பொ) அம்பிகாபதி, வேப்பூர் மாவட்டக் கல்விஅலுவலர் (பொ) செந்தமிழ்ச் செல்வி ஆகியோர் ஆய்வுசெய்தனர்.

Related Stories: