மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி பாடாலூர் அம்பாள்ஸ் மெட்ரிக் பள்ளி சாதனை

பாடாலூர், செப்.11 :  பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பாடாலூர் ஸ்ரீஅம்பாள்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்கள் வெற்றிப் பெற்று சாதனை படைத்தனர்.பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வித் துறை சார்பில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கில் கோ-கோ, கபாடி, தடகளம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதில் பாடாலூர் ஸ்ரீஅம்பாள்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.அதில் பெண்கள் பிரிவில் 75 புள்ளிகளை பெற்று ஒட்டுமொத்த சாதனையாளர் விருதினை பெற்றனர்.

மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்று பதக்கங்கள், கேடயங்கள், சான்றிதழ்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அப்பள்ளியைச் சேர்ந்த கிருத்திகா, நிஷாமினி ஆகியோர் தனித்திறன் போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளனர். பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் பாலச்சந்திரன், செயலாளர் குணச்சந்திரன், துணைத் தாளாளர் கேசவபாலாஜி, முதல்வர் பத்மாவதி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.மேலும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்த பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் புஷ்பராஜ், உடற்கல்வி ஆசிரியர் வேல்முருகன் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: