பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆசிரியர் தினவிழா

பெரம்பலூர், செப்.11:  பெரம்பலூரில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. பெரம்பலூர் புதுபஸ்டாண்டு பகுதியி லுள்ள தனியார் கூட்ட அரங்கில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக நடந்த ஆசிரியர் தின விழா விற்கு மாவட்டத் தலைவர் இராமர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் செல்லரை வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் கணேசன் முன்னி லை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், பட்டிமன்ற நடுவருமான கவிஞர் நந்தலாலா கலந்து கொண்டு சிறப்புரை பேசினார்.

பின்னர் மாநில அளவில் சாதனை படைத்த மாணவர்கள், 10ம் வகுப்புத் தேர்வில் 100சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள், பதவி உயர்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள், 2017ன் ஜாக்டோ, ஜியோ போராட்ட ஆசிரியர்கள் கவுரவிக்கப் பட்டனர். விழாவில் பெரம்பலூர் மாவட்டப் பொப்பாளர்கள் பழனிசாமி, சக்திசிவம், சுரேஷ், மாவட்ட இணைச் செயலாளர் அருள்சாமி, மாவட்ட துணைத் தலை வர்கள் ஸ்டாலின், கணேஷ்ராஜா, பிரபாகரன், மகளிரணி மாவட்டச் செய லாளர்கள் விஜயா, மாலதி, பெரம்பலூர் வட்டப் பொறுப்பாளர்கள் செல்வராஜ், செந்தில்குமார், குமார், இருதயராஜ், வேப்ப ந்தட்டை நந்தகுமார், அன்புச்செல்வன், செல்வம், ஆலத்தூர் கலையரசன், செல்வக்குமார், வேப்பூர் சுரேஷ், சக்தி வேல், வீரமணி உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் இளையராஜா நன்றி தெரிவித்தார்.பெரம்பலூர் மாவட்ட  அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெற்றிப் பெற்ற ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் லிட்டில் பிளவர் பள்ளி மாணவிகளை பள்ளி தாளாளர் தமிழ் வாணன், முதல்வர்கள் விஜயகுமார், கீதா, உடற்கல்வி ஆசிரியை சங்கீதா ஆகியோர் பாராட்டி

Related Stories: