இலுப்பூரில் உறியடி திருவிழா

இலுப்பூர், செப்.11: இலுப்பூரில் உள்ள கிருஷ்ணன் பஜனை மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. அன்றைய தினம் முதல் தினம்தோறம் பஜனை மடத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உறியடி விழா நேற்று நடந்தது. பக்தர்கள் உறியை அடிக்க முற்படும்போது இளைஞர்கள் வண்ணம் கலந்த நீரை பீய்ச்சி அடித்து விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் கோலாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories: