திருமயம் பஸ்ஸ்டாண்டில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைத்த கொட்டகை அகற்றம்

திருமயம், செப்.11: திருமயம் பஸ்ஸ்டாண்ட் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கொட்டகை அகற்றப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பஸ்ஸ்டாண்ட் அருகேக் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் ஓரம் 1,500 சதுர அடியில் காலியிடம் இருந்தது. இந்த இடத்தை அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து இரும்பு கம்பிகள் கொண்ட கொட்டகை அமைத்தார். இதுகுறித்து திருமயம் தாசில்தார் ரமேஷிடம் பொதுமக்கள் புகார் செய்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க தாசில்தார் உத்தவிட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா சர்வேயர் சிதம்பரம், ஆர்ஐ கோகிலா, விஏஓ பூமிநாதன் ஆகியோர் திருமயம் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றி கொள்ளப்பட்டது.

Related Stories: