திருட்டு, சாராய வழக்குகளில் கைதானவர் போலீஸ் நிலையத்தில் பிளேடால் கழுத்தறுத்து கைதி தற்கொலை முயற்சி குடியாத்தத்தில் பரபரப்பு

குடியாத்தம் செப்.11:குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் பிளேடால் கழுத்தறுத்து கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(28). இவர் மீது குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு மற்றும் சாராய கடத்தல் வழக்குகள் உள்ளது.இந்நிலையில், குடியாத்தம் டவுன் போலீசார் நேற்று காலை அவரது வீட்டிற்கு சென்று விக்னேஷை கைது செய்து குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை விக்னேஷ் பாத்ரூம் சென்றபோது திடீரென அங்கிருந்த பிளேடை எடுத்து கழுத்தை அறுத்துள்ளார்.

இதனால் வலி தாங்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் அலறினார். உடனே போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனே போலீசார் விக்னேஷை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் நிலையத்தில் கைதி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: