வாலாஜா, ெசப். 11: அரசு நிதியுதவி பள்ளியில் நடைபெறும் நிர்வாக முறைகேடுகளை கண்டித்து ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டையில் அரசு நிதி உதவி பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் உள்ளிட்ேடார் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி மாவட்ட தலைவர் மணி தலைமையில் பல்வேறு பள்ளியில் பணியாற்றும் 12 ஆசிரியர்கள் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.